மதுரை, ஜூன் 1: டெங்குவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்.
இன்று மதுரையில் அரசு பொதுமருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ”மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசுடன் இணைந்து பொதுமக்களும் செயலாற்ற வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி திட்டம் வெற்றியடையாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.