முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை ஆதினத்தில் பெண்களை வைத்து ஆராதனை: நித்தியானந்தர், ரஞ்சிதா பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 11: மதுரை ஆதினத்தில் வழக்கம் மற்றும் மரபுக்கு மாறாக பெண்களை வைத்து ஆராதனை நடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆதி

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:

மதுரை, ஜூன் 11: மதுரை ஆதினத்தில் வழக்கம் மற்றும் மரபுக்கு மாறாக பெண்களை வைத்து ஆராதனை நடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை ஆதினத்துக்கு நித்தியானந்தர் வந்த பிறகு, ஆதினத்தில் ஆதின மரபுக்கு விரோதமாக பெண்களை வைத்து ஆராதனை வழிபாடுகள் நடத்தப்பட்டது தொடர்பாக, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், இது குறித்து பதிலளிக்குமாறு, நித்தியானந்தர், ரஞ்சிதா, வைஷ்ணவி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →