நெல்லை- செங்கோட்டை அகல பாதையில் ரயில் விட வலியுறுத்தி அம்பையில் உண்ணாவிரதம்
அம்பாசமுத்திரம், ஜூன் 23: திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில் பாதையில் உடனடியாக ரயில் விட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திருநெல்வேலி செங்கோட்டை அகல
அம்பாசமுத்திரம், ஜூன் 23: திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில் பாதையில் உடனடியாக ரயில் விட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில்பாதையில் உடனடியாக ரயில் விட வேண்டும், அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் முன் பதிவுக்கு தனித்தனி மையம் திறக்க வேண்டும், திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை அம்பாசமுத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரம் ரயில் அருகில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள், அனைத்து மகளிர் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.