மேலூரில் இருவேறு சாலை விபத்துக்களில் இருவர் பலி
மேலூர், மே 30 : மதுரையை அடுத்த மேலூர் அருகே இன்று காலை இருவேறு இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர் மேலூர் அருகே தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முஸ்தபா
மேலூர், மே 30 : மதுரையை அடுத்த மேலூர் அருகே இன்று காலை இருவேறு இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்
மேலூர் அருகே தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முஸ்தபா (50) இவரது வீட்டில் நடைபெறவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக விருந்தினர்களை வரவேற்க மேலூர்- திருச்சி நான்கு வழிச்சாலையில் கும்பப்பட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ராஜபாளையத்தில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முஸ்தபா அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதேப்போல, மதுரை நான்கு வழிச் சாலையில் சூரக்குண்டு கிராமம் விளக்கு ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற பாரதி (45), ராஜா (46) மீது திருச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மோதியதில் இருவரும் துக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாரதி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் ராஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.