முகப்பு
தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்லில் ரயில் மறியல்: 100க்கும் மேற்பட்டோர் கைது

திண்டுக்கல், மே 31: பெட்ரோல் விலைஉயர்வைக் கண்டித்து பாரத் பந்த் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள், ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:34 PM
பகிர்:

திண்டுக்கல், மே 31: பெட்ரோல் விலைஉயர்வைக் கண்டித்து பாரத் பந்த் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள், ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கட்சியின் மாதர் சம்மேளனம் உள்பட சில அமைப்பினர் குருவாயூர் - திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் ரயில் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments