திருப்புவனம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
மானாமதுரை, மே.31: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி, ராசாத்தி தம்பதியினரின் மகள் லட்சணா(4). இவருக்கு கடந்த 1 வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. திருப்புவனத
மானாமதுரை, மே.31: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி, ராசாத்தி தம்பதியினரின் மகள் லட்சணா(4). இவருக்கு கடந்த 1 வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது.
திருப்புவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மானாமதுரை தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.