போலிஸார் மீது நடவடிக்கை கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்குரைஞர் கே. மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரில் நடந்த பிரச்னை காரணமாக தாக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்குரைஞர் கே. மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரில் நடந்த பிரச்னை காரணமாக தாக்கப்பட்டார்.
அவரைத் தாக்கியதாக கொருக்குப்பட்டி ஊராட்சித் தலைவர் மணிகண்டனை சக வழக்குரைஞர்கள் பிடித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மகேந்திரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைக் கண்டித்து மதுரை பெஞ்ச் ஆப் ஹைகோர்ட் அட்வகேட் அசோசியேஷன் சங்கத்தினர் அதன் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் காந்தி சிலை முன்பு ஒத்தக்கடை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பட்டம் நடத்தினர்.