முகப்பு
தற்போதைய செய்திகள்

பிஆர்பி கிரானைட் நிறுவன தொழிலாளர்கள் ஏமாற்றம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட் தொழிற்சாலை சீலிடப்பட்டுள்ளதால் நிறுவனம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:34 PM
பகிர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட் தொழிற்சாலை சீலிடப்பட்டுள்ளதால் நிறுவனம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கீழவளவு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் வண்டிப்பாறை உள்ளிட்ட கனிமவள நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களிலும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி திருடிச் செல்லப்பட்டது.  இது தொடர்பாக பிஆர்பி அதிபர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் குவாரிகள் தெற்குத் தெருவில் உள்ள கிரானைட் மெருகேற்றும் நிறுவனத்துக்கும் மதுரை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இந்த சீலை அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நிதிபதி உத்தரவிட்டபோதிலும் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்த மேலுமுறையீட்டை ஏற்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து,

மேலும் டிசம்பர் 5ம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.கடந்த 8, 9,10 ஆகிய தேதிகளில் தனிப்படை போலிஸார் மற்றும் வருவாய்த் துறையினர், கனிமவளத் துறையினர் சீலிடப்பட்ட கட்டங்களில் இருந்த ஆவணங்கள் மற்றும் கணினிப் பதிவுகளையும் கைப்பற்றினர்.

சீலிடப்பட்ட நிலையே தொடருவதால் கம்பெனி மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிறுவனம், தீபாவளிக்கு பிறகு திறக்கப்படும் என்று அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்திருந்தனராம். இதனால் வியாழக்கிழமை காலை முதல் ஏராளமான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்து மூடப்பட்டுள்ள தொழிற்சாலையைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →