முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் கரும்பு விவசாயிகள் நிர்வாகம் முத்தரப்பு பேச்சு

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலை நிர்வாகம் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் முத்தரப்பு பே

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலை நிர்வாகம் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை  மேற்கொண்டுள்ளனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நாளை கரும்பு அரவை தொடங்க வேண்டிய நிலையில், விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுத்துவிட்டு பிறகு அரவையைத் தொடங்க வேண்டும் என்று கோருவதால் இழுபறி நிலை நீடித்தது. இதனால் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.