தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையப் பகுதிகளில் கன மழை பொழிவதாலும், அனல் மின் நிலையத்தின் பராமரிப்புப் பணி காரணமாகவும் 5வது யூனிட்டில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணியின் காரணமாக ஷட்-டவுன் செய்யப் பட்டிருப்பதாகவும், மதியத்துக்கு மேல் அந்த யூனிட் இயங்கும் என்றும் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.