பொள்ளாச்சி அருகே 10 சவரன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளை
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் மணிகதாரர் வீதியில் குமாரசாமி என்பவரது வீட்டில் நேற்று இரவு 10 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டுப்போயுள்ளது.
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் மணிகதாரர் வீதியில் குமாரசாமி என்பவரது வீட்டில் நேற்று இரவு 10 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டுப்போயுள்ளது.
குமாரசாமி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொள்ளையர்களை பிடிக்க காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.