சிதம்பரத்தில் சோழன் எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம்
காவிரி உரிமை மீட்புக் குழுவினர், சிதம்பரத்தில் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மதியம் 1.15க்கு வந்த ரயிலை மறித்து,
காவிரி உரிமை மீட்புக் குழுவினர், சிதம்பரத்தில் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மதியம் 1.15க்கு வந்த ரயிலை மறித்து, தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் சார்பில் கி.வெங்கட்ராமன் தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதனால் ரயில் 10 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 80 பேர் நகர போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.