உதயகுமார் உருவபொம்மை எரிக்க முயற்சி: ச.ம.கட்சித் தொண்டர்கள் 27 பேர் கைது
பொள்ளாச்சியில் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர்கள் 27 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர்கள் 27 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை உதயகுமார் இழிவாகப் பேசியதைக் கண்டித்து இந்த கண்டனப் போராட்டமும் உருவ பொம்மை எரிப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தப் பட்ட இந்தப் போராட்டத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாலர் ஜெயகுமாரன் தலைமையில் தொண்டர்கள் கூடினர். பின்னர், அவர்கள் உருவபொம்மையை எரிக்க முயன்றபோது, போலீஸார் அதைக் கைப்பற்றி, கட்சித் தொண்டர்கள் 27 பேரைக் கைது செய்தனர்.