முகப்பு
தற்போதைய செய்திகள்

கிரானைட் வழக்கு : கனிம வள நிறுவன அதிகாரிகள் மூவருக்கு ஜாமீன்

மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட கனிவ வள நிறுவன அதிகாரிகள் மூன்று பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட கனிவ வள நிறுவன அதிகாரிகள் மூன்று பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் கிரானைட் அதிபர்களுக்கு உடந்தையாக இருந்து, அரசு கனிம வள நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை கடத்த உதவியதாக அரசு கனிம வள நிறுவனத்தின் ஊழியர்கள் மனோகரன், ஜவகர், ரகுபதி ஆகியோர் கீழ்வளவு போலிசாரால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் சார்பில் தாக்ல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி மதிவாணன், மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், கிரானைட் அதிபர்களான பி.எஸ். கிரானைட் நிறுவன அதிபர் பெரியசாமி, பிஆர். கிரானைட் நிறுவன அதிபர் ராஜசேகரன் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →