சிதம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கடத்தல்
சிதம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது யாசின். ஒரு திருமண மண்டப முதலாளி. இவரது மகன் முகமது ஃபைசல் (22). இவர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது யாசின். ஒரு திருமண மண்டப முதலாளி. இவரது மகன் முகமது ஃபைசல் (22). இவர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் 7ம் தேதி அவர் சிதம்பரம் வந்தார். பின்னர் நேற்று 8ம் தேதி காலை அவர் திருச்சிக்குத் திரும்பிச் சென்றார். திருச்சி சென்றடைந்தவுடன் தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் திருச்சி வந்துவிட்ட தகவலையும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சற்று நேரத்தில் திடீரென முகமது யாசினுக்கு, உங்கள் மகன் கடத்தப்பட்டுள்ளார். நீங்கள் ரூ.2 கோடி கொடுத்தால்தான் மகனை விடுவிப்போம் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதை அடுத்து, முகமது யாசின் சிதம்பரம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.