பயிர்காப்பீடு தொகையை கடனில் வரவு வைக்க உயர்நீதிமன்றம் தடை
பயிர் காப்பீடு தொகையை விவசாயிகள் பெற்ற கடனில் வரவு வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பயிர் காப்பீடு தொகையை விவசாயிகள் பெற்ற கடனில் வரவு வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகையை கடனில் வரவு வைக்கும்படி மாவட்ட கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் கிராம கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை விவசாயிகள் பெற்ற கடனில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கை தாக்கல் செய்தார். வழக்குரைஞர் அஜாய்கோஷ் வாதாடினார். இவ்வழக்கு விசாரணை தலைமைநீதபதி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்ககு. விசாரணையில் தமிழக உழவர் முன்னணி வாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் பயிர்காப்பீடு இழப்பீடு தொகையை கூட்டுறவு கடனுக்கு ஈடு செய்து கொள்ளும் கூட்டுறவுத்துறை ஆணைக்கு தடை விதித்தது. மேலும் 3 வார காலத்திற்குள் பதலளிக்குமாறு கூட்டுறவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தானே புயலால் பேரழிவுக்கு உள்ளாகி, காவிரிநீர் மறுக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பயிரை இழந்தும், தற்போது மின்வெட்டால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி தத்தளிக்கும் விவசாயிகள் இந்த ஆணையின் மூலம் நிவாரணம் பெறுவார்கள் என்பது சற்று மகிழ்ச்சியாக உள்ளது என உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தெரிவித்தார்.