மின்தடை: ஈரோடில் மேயர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை
ஈரோடு மாநகராட்சியில் 46வது வார்டு பெரியசடையம்பாளையம் பகுதியில் சில நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை, மின்சார விநியோகம் இல்லை, தெரு விளக்குகள்கூட எரிவதில்லை என்று கூறி,
ஈரோடு மாநகராட்சியில் 46வது வார்டு பெரியசடையம்பாளையம் பகுதியில் சில நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை, மின்சார விநியோகம் இல்லை, தெரு விளக்குகள்கூட எரிவதில்லை என்று கூறி, இன்று காலை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள், மேயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பியபடி, மேயர் அலுவலகம் முன் திரண்டிருந்தனர்.