முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ரயிலில் இருந்து விழுந்து டிரைவர் காயம்: மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கீழே விழுந்து துணை டிரைவர் காயமுற்று மயிலாடுதுறை மருத்துவமனையில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கீழே விழுந்து துணை டிரைவர் காயமுற்று மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் ரயில் புறப்படும் போது துணைடிரைவர் முஜிபுர்ரஹ்மான் கொடி காட்டுவதற்காக வெளியே தலையை நீட்டியுள்ளார். அப்போது ரயிலிலிருந்து தலைக்குப்புற கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். கீழே விழுந்ததில் கால் மற்றும் கையில் பலத்த காயமுற்றை துணை டிரைவர் முஜிபுர் ரஹ்மான் அதே ரயில் மயிலாடுதுறை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காயமுற்ற துணைடிரைவர் முஜிபுர் ரஹ்மானின் சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லமாகும். தற்போது அவர் குடும்பத்துடன் விழுப்புரம் தென்னக ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.