முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அதிமுக நகரச் செயலர் மீது வழக்கு

சிதம்பரம் நகர அதிமுக செயலர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சிதம்பரம் நகர அதிமுக செயலர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை நகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், மகேந்திரன் மற்றும் போலீஸார் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அதிமுக நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், அங்கிருந்த அதிமுக நிர்வாகி சண்முகம் மற்றும் அவருடயை கார் ஓட்டுநர் ஆகியோரை ஆபாசமாத திட்டி தாக்கி, அதனை தடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர போலீஸார் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.