திண்டிவனம் பிரம்மதேசம் கொலை வழக்கு: குற்றவாளிகள் மூவர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண்
திண்டிவணம் பிரம்மதேசம் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் 3 பேர் சிதம்பரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
திண்டிவணம் பிரம்மதேசம் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் 3 பேர் சிதம்பரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
திண்டிவனம் பிரம்மதேசம் அருகே நல்லாணம் கூட்டுரோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜா (29) என்பவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெருமுக்கன் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), வாசு (25), பாலா (24) ஆகிய மூவரும் திங்கள்கிழமை சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நீதிபதி ஜெய்சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். நீதிபதி மூவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.