சிதம்பரத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் மார்க். கம்யூ பிரசார ஊர்தி பயணம்
சிதம்பரத்தில் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார ஊர்திப் பயணம் தொடர்ந்து நடைபெற்றது.
சிதம்பரத்தில் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார ஊர்திப் பயணம் தொடர்ந்து நடைபெற்றது.
அக்.15 நேற்று முதல் அக்.18 வரை நான்கு நாட்கள் இந்த பிரசார ஊர்திப் பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், காவிரி நீர் இன்றி 16 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளைச்சல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 16 மணி நேரம் மின் வெட்டு சென்னையைத் தவிர மற்ற இடங்களில் அமலில் உள்ள நிலையில், சென்னைக்கு மட்டும் 1 மணி நேரம் மின்வெட்டு அளிக்கப்படுவதைக் கண்டித்தும் இந்த பிரசார ஊர்திப் பயணத்தில் வலியுறுத்தப்படுவதாக பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், மின்வெட்டு பிரச்னையைக் கையாள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தீர்வு காண முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.