முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்வெட்டைக் கண்டித்து மின்மாற்றிக்கு மாலை சூட்டி போராட்டம்: தி.மு.க.வினர் 60 பேர் கைது

மின்வெட்டைக் கண்டித்து, பொள்ளாச்சி நகர திமுகவினர் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்மாற்றி (டிரான்ஸ்ஃபர்மர்) ஒன்றை

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

மின்வெட்டைக் கண்டித்து, பொள்ளாச்சி நகர திமுகவினர் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்மாற்றி (டிரான்ஸ்ஃபர்மர்) ஒன்றை பாடை கட்டி, ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவர்கள் பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தை நோக்கிச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் ஊர்வலமாக வந்த பொள்ளாச்சி தி.மு.க. நகரச் செயலர் செல்வராஜ் தலைமையில் வந்த திமுகவினர் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.