மருதுபாண்டியன் நினைவிடத்தில் 211வது குருபூஜை விழா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் மருதுபாண்டியர் 211வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் மருதுபாண்டியர் 211வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது.
இதில், ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்களும், அகமுடையார் சமுதாயத்தினரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் காளையார்கோவிலுக்கு வந்து மருதுபாண்டியர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து மருதுபாண்டியருக்கு நேர்த்திக் கடன் செய்தனர்.
மருதுபாண்டியன் குருபூஜை விழாவையொட்டி, காளையார்கோவிலில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.