சிவகங்கை அருகே கல்லூரி மாணவி தற்கொலை- ஆசிரியை மீது வழக்கு
சிவகங்கை,செப்.5: சிவகங்கை அருகே கல்லூரியில் ஆசிரியை திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக இவரது தந்தை போலீசில் புகார் செய்ததையடுத்து ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து
சிவகங்கை,செப்.5: சிவகங்கை அருகே கல்லூரியில் ஆசிரியை திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக இவரது தந்தை போலீசில் புகார் செய்ததையடுத்து ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே தச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் இவர் செம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரது மகள் ஆனந்தஜோதி(19) சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந் நிலையில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய ஆனந்தஜோதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கதிரேசன் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கல்லூரியில் வகுப்பு ஆசிரியை ஹேமமாலினி மகள் ஆனந்தஜோதியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஹோமமாலினி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்