முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் திமுக பிரமுகர் படுகொலை : தருமபுரி நீதிமன்றத்தில் நால்வர் சரண்

தருமபுரி, செப்., 07 : சேலம் திமுக பிரமுகர் சண்மகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை செய்து வந்த

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:48 PM
பகிர்:

தருமபுரி, செப்., 07 : சேலம் திமுக பிரமுகர் சண்மகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை செய்து வந்தனர். கொலை நடந்த விதத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக தருமபுரி குற்றவியல் இரண்டாவது நீதிமன்றத்தில், தங்கராஜ் (27), பாபு (33), வீரராகவன் (27), செம்பட்டையன் என்கிற நாகராஜ் (25) ஆகியோர் இன்று சரண் அடைந்துள்ளனர். குற்றவியல் இரண்டாவது நீதிபதி (பொறுப்பு) இந்துலதா நால்வரையும் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.