முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து : 3 பேர் பலி

மேலூர், செப்., 15 : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளரிப்பட்டை கிராமத்தில் உள்ள தனியார் டயர் தெழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மதுர

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:54 PM
பகிர்:

மேலூர், செப்., 15 : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளரிப்பட்டை கிராமத்தில் உள்ள தனியார் டயர் தெழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளரிப்பட்டையில் உள்ள ஸ்ரீ சக்ரா டயர் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணிக்கு வேலை துவங்கியது. சுமார் 8 மணிக்கு தொழிற்சாலையின் கெமிக்கல் கலவைப் பிரிவில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அங்கு உடன் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கெமிக்கல் பிரிவு என்பதால், சுமார் 30 அடி நீளமுள்ள ஷெட் முழுமையாக எரிந்து நாசமானது. இதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களில் ஒரு உடல் மட்டுமே அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தது. அது கல்லம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பது தெரிய வந்துள்ளது. இருவரது உடல் எரிந்து சாம்பலான நிலையில் அவர்களது விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மண்டல டிஎஸ்பி, வட்டாட்சியர் வசந்தா ஜூலியட் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →