சிதம்பரத்தில் கம்பர் விழா!
அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் பேராசிரியர் ச.கணபதிராமன் கம்பனின் சிந்தனைச்சுடர் என்ற
சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு சேக்கிழார் மணி மண்டபத்தில் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழா விழா அறக்கட்டளை சார்பில் கம்பர் விழா நடைபெற்றது.
அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் பேராசிரியர் ச.கணபதிராமன் கம்பனின் சிந்தனைச்சுடர் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கம்ப நாடர் கண்ட நரசிங்க அவதாரம் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறை முன்னாள் பேராசிரியர் சி.நம்மாழ்வார் இசைச் சொற்பொழிவாற்றினார். ஒருங்கிணைப்பாளர் த.சுவாமிநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன், பொருளாளர் வி.பாலதண்டாயுதம், கே.சேதுமாதவன், சந்திரசேகரன், சிவராமன், சிவக்குமார், பொன்னம்பலம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.