சிதம்பரம் அண்ணாமலைநகரில் மெக்கானிக் கொலை
சிதம்பரம் அண்ணாமலைநகரில் மெக்கானிக் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் மெக்கானிக் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள இருசக்கர வாகன ஒர்க்க்ஷாப்பில் செவ்வாய்க்கிழமை மெக்கானிக் சந்திரசேகரன் (39) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். கொலையுண்ட சந்திரசேகரன் மனைவி பெயர் மீனாட்சி பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றுகிறார். மனைவிக்கும், இவருக்கும் ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரன் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் மனைவியை மருத்துவமனைக்கு நுழைந்து சந்திரசேகர் தாக்கியது குறித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனியாக வசித்து வந்த சந்திரசேகரன் இருசக்கர வாகன ஒர்க்க்ஷாப்பில் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.