முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு அருகே மின்கம்பம் சரிந்து ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு அருகே ரயில் பாதையில் மின் கம்பம் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:06 AM
பகிர்:

ஈரோடு அருகே ரயில் பாதையில் மின் கம்பம் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு அருகே தொட்டிப்பாளையம் ரயில் நிலையத்தில், ரயில் மின்கம்பம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால், எர்ணாகுளம் பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் போக்குவரத்தில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பாதையில் வரும் அனைத்து ரயில்களின் போக்குவரத்து நேரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இன்னும் சில ரயில்களும் தாமதமாகச் செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.