முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை கோளரங்கத்தை டிஜிட்டல் மயமாக்க ரூ. 10 கோடி : பி. பழனியப்பன்

சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.

Updated On : 4 ஏப்ரல், 2013 at 4:38 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:36 PM

சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அவர் தாக்கல் செய்த உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கமாக மேம்படுத்தப்படும். சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள முப்பரிமான அரங்கு நவீனப்படுத்தப்படும்.

வேலூரில் முப்பரிமான அரங்கு: அறிவியல் தொழில் நுட்ப கோட்பாடுகளை பரப்பும் வகையில் வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் முப்பரிமான அரங்கு அமைக்கப்படும்.

Advertisement

கணித பஸ்: கிராமப்புற மாணவர்களுக்கு கணிதத்தின் மீது ஆர்வத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான நடமாடும் பஸ் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.