சென்னை கோளரங்கத்தை டிஜிட்டல் மயமாக்க ரூ. 10 கோடி : பி. பழனியப்பன்
சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அவர் தாக்கல் செய்த உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: சென்னையில் உள்ள கோளரங்கம் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கமாக மேம்படுத்தப்படும். சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள முப்பரிமான அரங்கு நவீனப்படுத்தப்படும்.
வேலூரில் முப்பரிமான அரங்கு: அறிவியல் தொழில் நுட்ப கோட்பாடுகளை பரப்பும் வகையில் வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் முப்பரிமான அரங்கு அமைக்கப்படும்.
Advertisement
கணித பஸ்: கிராமப்புற மாணவர்களுக்கு கணிதத்தின் மீது ஆர்வத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான நடமாடும் பஸ் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.