சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலை
சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் பாலமான் வாய்க்காலிலிலருந்து நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த மக்கள் சாலியாந்தோப்பு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர். அவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல்
சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்து அருகாமையில் உள்ள நீர்நிலையில் கொண்டு விட்டனர்.
சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் பாலமான் வாய்க்காலிலிலருந்து நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த மக்கள் சாலியாந்தோப்பு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர். அவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனவர் பி.மணி, வனக் காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் உள்ளிட்டோர் விரைந்து அக்கிராமத்திற்கு சென்று ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலையை பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு விட்டனர்.