முகப்பு
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்: ராமதாஸ்

தமிழகத்தில் சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகின்றனர். இந்த விபத்துகளுக்குக் காரணம் மதுதான்.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.ஆனால் அரசு மூட மறுத்து வருகிறது.மதுக்கடைகளை மூடினால்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:09 AM
பகிர்:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பாமக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகின்றனர். இந்த விபத்துகளுக்குக் காரணம் மதுதான்.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.ஆனால் அரசு மூட மறுத்து வருகிறது.மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கின்றனர்.  இப்போதும் கள்ளச் சாராயம் இருக்கத்தான் செய்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு கள்ளச் சாராயம் குடித்ததில் 176 பெண்கள் உள்பட 451 பேர் பலியாகியுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.எனவே நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உடனடியாக மூடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுப்போம் என்றார்.

நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூடி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, சமூகநீதி பேரவை தலைவரும் வழக்குரைஞருமான பாலு உள்பட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →