ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை
ஆவின் ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:43 PM
ஆவின் ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ். விஜயதரணி (விளவங்கோடு), ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறிóத்து ஆய்வு செய்வதாக கடந்த ஆண்டு அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
Advertisement