ஈரோடு அருகே தாய் மகளைக் கட்டிப்போட்டு 3 சவரண் நகை கொள்ளை
ஈரோடு அருகே நல்லித்தோட்டம் என்ற இடத்தில் தாய், மகளைக் கட்டிப் போட்டு 3 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அருகே நல்லித்தோட்டம் என்ற இடத்தில் தாய், மகளைக் கட்டிப் போட்டு 3 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மைய மருத்துவமனையில் கருமுட்டை சேகரிப்பு ஊழியராகப் பணி புரிகிறார் சாந்தா (35). இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இன்று காலை 9 மணி அளவில் இவரது வீட்டுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி விற்பனை செய்வதாகச் சொல்லி வந்த மர்ம நபர்கள், இவரையும் இவரது மகளையும் கட்டிப் போட்டு, அவர்கள் அணிந்திருந்த 3 சவரன் நகை, எல்சிடி., ஸ்கூட்டி ஆகியவற்றைத் திருடிக் கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.