கடல்பாசி உணவு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு என ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் மருத்துவ அறிவியல் கழகம், வசுபால் கிரியேஷன்ஸ் மக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய கடல்பாசி மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் குறித்த அறிவியல் ஆய்வுக்கூட்டம்
கடல்பாசி (ஸ்பைருலினா) உணவு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 3 கிராம் கடல்பாசியில் ஒரு கிலோ காய்கறி மற்றும் பழங்களின் அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது என சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குழந்தை நல மருத்துவர் பேராசிரியர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் மருத்துவ அறிவியல் கழகம், வசுபால் கிரியேஷன்ஸ் மக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய கடல்பாசி மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் குறித்த அறிவியல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவ அறிவியல் கழகச் செயலாளர் ஜே.கபாலிமூர்த்தி வரவேற்றார். டாக்டர் கே.என்.வசுப்பாலயா, டாக்டர் ரத்தினா வசுப்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மலேசியா நாட்டின் டிஎக்ஸ்என் நிறுவனத் தலைவர் டாக்டர் லிம்சியோ ஜின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குழந்தை நல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.ரமேஷ் ஸ்பைருலினா (கடல்பாசி) மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் பற்றி அறிவியல் விளக்கமளித்து பேசினார். அவர் பேசியதாவது: சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளியில் 150 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு கடல்பாசி உணவு ஒரு ஆண்டு காலம் அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அக்குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் வளர்ச்சி, புரோட்டீன், வைட்டமின், மினரல் ஆகியவற்றின் அளவு வளர்ச்சியடைந்துள்ளது இச்சோதனை மூலம் தெரியவந்துள்ளது. கடல்பாசி (ஸ்பைருலினா) உணவு ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்க முழு ஊட்டச்சத்தினை உடலிற்கு வழங்குகிறது. இதனை டி.எக்ஸ்.என் (DXN Holdings, Malaysia) என்ற நிறுவனம் தயாரித்து உலகெங்கும் வழங்குகிறது. என டாக்டர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இந்திய மருத்துவக்கழகத் தலைவர் ஆர்.பாஸ்கரன், டாக்டர் செல்வமுத்துக்குமரன், டாக்டர் பாலசந்தர், டி.எக்ஸ்.என் உறுப்பினர் ஷெக்மொகைதீன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், டி.எக்ஸ்.என் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எம்.மணிவாசகம் நன்றி கூறினார்.