தூத்துக்குடியில் போலி குளிர்பானங்கள் தொடர்பாக சோதனை
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தரம் குறிந்த மற்றும் போலி குளிர்பானங்கள் குறித்த புகார்கள் அதிகம் வந்ததால் உணவு பாது\காப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று காலை 9.30 முதல்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தரம் குறிந்த மற்றும் போலி குளிர்பானங்கள் குறித்த புகார்கள் அதிகம் வந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று காலை 9.30 முதல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தரம் குறைந்த போலி குளிர்பான பாட்டில்கள் குறித்து கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகிறார்கள். மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.