தற்போதைய செய்திகள்

பிரசவத்துக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்ட ஊழியர் சஸ்பெண்ட்

சேலம் பழைய பஸ் நிலையம் வணிக வளாகத்தில் நடைபாதையில் வசித்து வருபவர் சாமுவேல். இவரது மனைவி லட்சுமி (27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த மற்றொரு ஆதரவற்ற பெண்ணின் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற லட்சுமியிடம்

க. தங்கராஜா

பிரசவத்துக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்டு விரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை துப்புரவுப் பணியாளர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் பழைய பஸ் நிலையம் வணிக வளாகத்தில் நடைபாதையில் வசித்து வருபவர் சாமுவேல். இவரது மனைவி லட்சுமி (27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த மற்றொரு ஆதரவற்ற பெண்ணின் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற லட்சுமியிடம், அங்கிருந்த ஊழியர்கள் பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.ஆனால் பணம் கொடுக்க வழியில்லாததால் வெளியேற்றப்பட்ட லட்சுமி, வணிக வளாகம் அருகேயுள்ள கழிப்பிடத்தின் பின்பகுதியில் ஆதரவற்ற பெண்ணின் உதவியுடன் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம் விசாரணை நடத்தினார். ஆனால் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் அரசு உத்தரவின் பேரில் திடீரென மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் விசாரணை நடத்தினார். சம்பவத்தின்போது உடனிருந்த செவிலியர் பயிற்சி மாணவி, துப்புரவுப் பணியாளர் ஆகியோரை ஆட்சியர் முன்னிலையில் லட்சுமி அடையாளம் காட்டினார்.அப்போது தன்னிடம் லஞ்சம் கேட்டது துப்புரவுப் பணியாளர் எஸ்.மேரி (38) என்று லட்சுமி கூறினார். இதையடுத்து மேரி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் மேரியை தாற்காலிக பணி நீக்கம் செய்து டீன் வள்ளிநாயகம் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக டீன் தாக்கல் செய்த அறிக்கையின் பேரில் தவறிழைத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு லஞ்சம் கேட்டால் உடனடியாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடமோ, ஆட்சியரிடமோ தகவல் தெரிவிக்கலாம் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிநவீன கருவிகள் உள்ளன. மாதம்தோறும் சுமார் 400 முதல் 600 பிரசவங்கள் வரை இங்கு நடைபெறுகின்றன. அதிகளவில் குழந்தைகள் பிறக்கும் அரசு மருத்துவனைகளில் தமிழகத்திலேயே இரண்டாவது இடத்தில் சேலம் மருத்துவமனை உள்ளது.

 தனக்கு நேரிட்ட கொடுமை குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்ததற்காக லட்சுமி தாக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறும். அதில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியர்கள் தங்களுக்கே உரிய சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT