முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 3 டன் அழிப்பு

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 3 டன் அளவில் இன்று காலை அழிக்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் அருணா தலைமையில் அதி

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 3 டன் அளவில் இன்று காலை அழிக்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் அருணா தலைமையில் அதிகாரிகள் குழு இன்று காலை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோடு, ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் போது, கார்பைடு மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டன. இந்த சோதனை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.