முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே லாரி மோதிய விபத்தில் இருவர் சாவு!

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவளக்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசன் (28). இவர் சென்னையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலைபார்க்கும் ஐயப்பனும் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:24 AM
பகிர்:

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது, லாரி மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த பாத்திர வியாபாரி உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவளக்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசன் (28). இவர் சென்னையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலைபார்க்கும் ஐயப்பனும் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சத்திரம் காவல் நிலையம் அருகே எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மேற்கண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →