நிர்வாக சீர்கேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்க கோரி இந்திய கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகள், நிதிமுறையீடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து அரசு விரிவான அறிக்கை வெளியிட
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகள், நிதிமுறையீடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து அரசு விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டி.மணிவாசகம், பேராசிரியர் எஸ்.சுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு ஏ.பி.நாகராஜன், எஸ்.காசிலிங்கம், ப.ஜெகத்ரட்சகன். ஜி.பூபாலன், எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.