முகப்பு
தற்போதைய செய்திகள்

வீரவநல்லூர் கூட்டுறவு வங்கி தேர்தலில் 11 பேர் வெற்றி

வீரவநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 31 பேர் போட்டியிட்டனர். இதில் 11 பேர் வெற்றி பெற்றதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:25 AM
பகிர்:

வீரவநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 31 பேர் போட்டியிட்டனர். இதில் 11 பேர் வெற்றி பெற்றதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

வீரவநல்லூர் டி.ஏ. 16 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு 11 பேர் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் 31 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து கடந்த 19 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 4174. இதில் 1425 வாக்குகள் பதிவானது.

செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 216 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு: அடைப்பு குறிக்குள் வேட்பாளர் பெற்ற வாக்குகள். ஆர். ஆதிஜெயலட்சுமி (321), சு. மாரி (266), அமுதா (215), ஆர். பாடகலிங்கம் (169),

சு. சீவலக்கண்ணு (165), ப. குமார் (438), சு. தெய்வநாயகம் (438), சந்தனக்குமார் (332), சங்கர் (315), இளையராஜா (278), சந்தானம் (233) ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ஆர். நாகராஜன் அறிவித்தார். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 30 ம் தேதி நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →