திருவண்ணாமலை கோயிலில் இன்று பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது
சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால், கோயிலில் இன்று பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால், கோயிலில் இன்று பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பெளர்ணமியையொட்டி வியாழக்கிழமை உண்ணாமலையம்மன், அருணாசலேஸ்வரர் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.
எனவே, பக்தர்கள் யாரும் பரிந்துரைக் கடிதங்களை கொண்டுவர வேண்டாம் என்றும், ரூ.20, ரூ.50 கட்டண தரிசனம் உண்டு என்றும் கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.