பாலமடை கோயில் சித்திரைத் திருவிழா: யானை தாக்கி 9 பேர் காயம்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே பாலமடை ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகின்றது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே பாலமடை ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, விழாவில் இருந்த யானை ஒன்றை சிலர் சீண்டியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த யானை ஆவேசமுடன் தாக்கியதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் நிலை மோசமாக உள்ளது. அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.