முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை முதல் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:29 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்புவது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் நிறுத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பருவமழை பொய்தத்தாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து இன்றைய நிலவரப்படி வெறும் 75.80 மில்லியன் கனஅடியாக குறைந்தது.

இதனால் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீர்வாங்கி நெடுமாடத்திலிருந்து நீரை பம்ப் செய்து அனுப்ப முடியாமல் போனதால்  நாளை காலை முதல் நீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று வரை சென்னை குடிநீர் வாரியத்திற்கு குறைந்தளவான விநாடிக்கு 18 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →