முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே 40 பவுன் நகைகள் திருட்டு! தம்பி கைது, நகைகள் மீட்பு

புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புற பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் இவரது தம்பி முரளிதாஸ் தனது

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:33 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருடு போனது. புவனகிரி போலீஸார் நகைகளை திருடிய தம்பியை கைது செய்து நகைகளை மீட்டனர்.

புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புற பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் இவரது தம்பி முரளிதாஸ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். முரளிதாஸ் கடந்த ஒருமாதமாக கடன் தொல்லையால் வெளியூரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் அண்ணன் பிரேமநாதன் குடும்பத்துடன், முரளிதாஸ் மனைவியையும் அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை காலை கீரப்பாளையம் அருகே உள்ள வடப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.

இதுகுறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் சந்தேகத்தின் பேரில் செல்போன் மூலம் தம்பி முரளிதாஸை தொடர்பு கொண்டு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாகம் பிரிக்காததாலும், கடன் தொல்லை தாங்க முடியாமல் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடியதை முரளிதாஸ் ஒப்புக்கொண்டார். அதன் பேரில் போலீஸார் தம்பி முரளிதாஸை கைது செய்து, நகைகளை மீட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →