மரம் முறிந்து விழுந்து வாசலில் படுத்திருந்த பெண் பலி
தஞ்சை அருகே திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் வீட்டு முன்னர் படுத்திருந்தபோது, தென்னை மரம் முறிந்து விழுந்து பெண் பலியானார்.
தஞ்சை அருகே திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் வீட்டு முன்னர் படுத்திருந்தபோது, தென்னை மரம் முறிந்து விழுந்து பெண் பலியானார்.
நெடும்பலம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மனைவி அன்னபூரணி (44) நேற்று இரவு வீட்டு வாசலில் படுத்திருந்தாராம். அப்போது திடீரென தென்னை மரம் முறிந்து விழுந்துள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.