சேலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டியில் காந்தி சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கன்னங்குறிச்சி போலீஸார் தேடி வருகின்றனர்.
கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சுமார் 3 அடி உயர காந்தி சிலை உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு காந்தி ஜயந்தி அன்று அப்போதைய சேலம் 2-வது தொகுதி எம்.எல்.ஏ. மு.கார்த்தியால் திறக்கப்பட்ட இந்த சிலையை, ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
ஊராட்சி அலுவலகம் எதிரேயுள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் திங்கள்கிழமை இரவு ஏராளமான இளைஞர்கள் அந்த பகுதியில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற சிலர் காந்தி சிலையின் இரண்டு கைகளும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். இது குறித்த தகவல் பரவியதும் காந்தி சிலை அருகில் ஊர் பொதுமக்கள் திரண்டனர்.
இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் பாபு, கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து மாநகர போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமாரன், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்தனர்.சேதமடைந்த காந்தி சிலையின் கைகளை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்தது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கன்னங்குறிச்சி போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.