லால்குடி அருகே வயிற்றுப் போக்குக்கு 2 பேர் பலி
லால்குடி ஜங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (40), லால்குடி ஆழிகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மனைவி புஷ்பம்(50). இருவரும் திருச்சி அருகே உள்ள மணிகண்டம் பகுதிக்கு துக்க நிகழ்வுக்கு
லால்குடி ஜங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (40), லால்குடி ஆழிகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மனைவி புஷ்பம்(50). இருவரும் திருச்சி அருகே உள்ள மணிகண்டம் பகுதிக்கு துக்க நிகழ்வுக்கு சென்று வந்தனர். அங்கே இரவு ஒரு கடையில் உணவு உண்டனராம். இந்நிலையில் அவர்களுக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டு, அன்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.