இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் மூணுசென்ட் பகுதியில் வசித்து வருபவர் துரைப் பாண்டியன். இவரது மகள் செல்வக்கனி தூத்துகுடியில் அண்ணாநகர் பிவிடி சிக்னல் அருகே உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில்
தூத்துக்குடியில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் மூணுசென்ட் பகுதியில் வசித்து வருபவர் துரைப் பாண்டியன். இவரது மகள் செல்வக்கனி தூத்துகுடியில் அண்ணாநகர் பிவிடி சிக்னல் அருகே உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள், அந்தப் பெண்ணின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை அண்ணாநகர் சிக்னல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.