முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் திரிந்த சென்னையைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ரேணுகாதேவி (36). இவருக்கும் சுனில் என்பவருக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோரிடம் வசித்து வந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:18 PM
பகிர்:

சிதம்பரம் புழவழிச்சாலையில் திரிந்து கொண்டிருந்த பெண்ணை அவ்வழியே சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ரேணுகாதேவி (36). இவருக்கும் சுனில் என்பவருக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோரிடம் வசித்து வந்த ரேணுகாதேவி உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்கு செல்வதாக ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை விட்டு புறப்பட்டு சிதம்பரம் வந்துள்ளார். சிதம்பரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாக திரிந்து கொண்டிருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நகர போலீஸார் அப்பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →